Monday, August 30, 2010

அந்த இரண்டு நொடிகளில்..




கண்கள்  இமைக்க மறந்து விட்டன....

இதயம் துடிக்க மறந்து விட்டது..

உதடுகள் பேச மறந்து விட்டன...

இதெல்லாம் எதனை யுகமாய் என்ற

கணக்கை கூட என் அறிவு மறந்து விட்டது..

நீ என் கை பிடித்து பேசிய

அந்த இரண்டு நொடிகளில்..

நீயே சொல்லி விடேன்..





என் நா வறண்டு விட்டது..

 உதடுகள் உலர்ந்துவிட்டன..

 கண்கள் ஈரமாய் இருக்கின்றன..

இதயம்  உறைந்து விட்டது..

கைகள் மரத்து விட்டன..

தயவு செய்து நீயே சொல்லி விடேன்..

நம் காதலை..

Tuesday, July 27, 2010

நிறம் மாறும் சூரியன்

The Earth and other matter (including other planets, asteroids, meteoroids, comets and dust) orbit the Sun.

நீ வண்ண சட்டை அணியும்போதெல்லாம்

நிறம் மாறுகிறது சூரியன்...

அடிக்கடி கருப்பு சட்டை அணியாதே..

தினம் தினம் சூரிய கிரகணத்தை

இந்த பூமி தாங்காது..

Monday, July 19, 2010

கவிதை

கவிதை என்பதற்கு விளக்கம் சொல்லவா?

சுருக்கமாய் சொன்னால் நீ..

விளக்கமாய் சொன்னால்

நீ மட்டும்...

Wednesday, July 7, 2010

உன்னைப்போல்

Click to downlowd the picture ::


மனதைக் கவர்ந்த  கவிதையொன்றை

வர்ணிக்கச் சொன்னார்கள்...

எவ்வளவு யோசித்தும்

வேறெதுவும் தோன்றவில்லை...

"உன்னைப்போல் இருந்தது"

என்பதைத் தவிர...

Tuesday, July 6, 2010

குறுஞ்சிரிப்பு

falling apple cartoons, falling apple cartoon, falling apple picture, falling apple pictures, falling apple image, falling apple images, falling apple illustration, falling apple illustrationsசமீபத்திய குறுஞ்செய்தி ...

இயற்பியல் இன்னும்

சுலபமாய் இருந்திருக்கும் ...

ஒரு வேளை..

நியூட்டன் தலையில் ஆப்பிளுக்கு பதிலாக

பலா பழம் விழுந்திருந்தால்..

Friday, July 2, 2010

எங்கு போகிறோமென்பது

Two Hands

எங்கு போகிறோம் என்பது லட்சியமே இல்லை

என் கால்களுக்கு....

உன் கை பிடித்து நடக்கும் போது.....

Wednesday, June 30, 2010

உண்மை

உன்னுடன் நடக்கும் போதெல்லாம்

தடுக்கி விழுகிறேன்...

நீ பிடித்துக்கொள்வாய் என்பதற்காகவே.....

Monday, June 28, 2010

நீ

ஒவ்வொரு முறை நீ
அலை பேசி இணைப்பை துண்டிக்கும் போதும்
என் இதயத்தையும் சேர்த்துத்தான் துண்டிகிறாய்..
அணைத்த அலைபேசியிலும் உன் மூச்சின் ஈரம் இருக்குமென
இன்னும் அதை காதோடு தான் அணைத்து இருக்கிறேன் நான்..

Monday, June 7, 2010

அம்மா

நான் முதன் முதலில் கற்றறிந்த வார்த்தை நீ..

நான் முதன் முதலில் உணர்ந்து அறிந்த தீண்டலும் நீ..

நான் முதன் முதலில் சுவையறிந்த உணவும் நீ..

நான் முதன் முதலில் தோள் சாய்ந்த தோழியும் நீ..

ஆதியாய் எனக்கு எல்லாமுமாக இருந்த உனக்கு 

இறுதி வரை இருப்பேன் உன் ஆதியாய்... 

உனக்கு அம்மாவாய்...